JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு புற்று நோய்களில் அதில் ஒன்று தான் குடல் புற்றுநோய். கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கம்பில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். கம்பில் மிகவும் அதிக அளவில் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் ஏற்படும் இரத்தசோகை மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வந்தால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீங்கும்.
No comments:
Post a Comment