Tuesday, February 16, 2021

'ஸ்மார்ட்' வகுப்பறை பள்ளிகள் கணக்கெடுப்பு

மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மூன்று கட்டமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். 

இதற்கு ஆடியோ, வீடியோ வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்ட பள்ளிகள் தேவைப்படும். 

எனவே ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் சட்டசபை தொகுதிகள் வாரியாக அப்பயிற்சியளிக்க பள்ளிகளில் தேவையான ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளதா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள அது தொடர்பான விரிவான அறிக்கை கோரப்பட்டுள்ளது. 

தேர்தல் பிரிவு அலுவலர்கள் கணக்கெடுத்து அப்பட்டியலை தயார் செய்கின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News