உடுமலை கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 'வாட்ஸ்ஆப்' வாயிலாக திருப்புதல் தேர்வு, வரும், 24ல் துவங்குகிறது.கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மாணவர்களின் கல்வி நாட்டம் குறைவதை தடுக்க, 'ஆன்லைன்' வழி தேர்வுகள் நடத்தப்பட்டும் வருகின்றன.இந்நிலையில், 'வாட்ஸ்ஆப்' வாயிலாக திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, உடுமலை கல்வி மாவட்டத்தில், முதல் திருப்புதல் தேர்வு வரும், 24ல் துவங்கி, 27ம் தேதி வரை நடத்தப்படுகிறது.
இதற்காக, மாவட்ட பொதுத்தேர்வுக்குழு தயாரிப்பின் வினாத்தாள்கள், அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும், 24ல், கணிதம், தாவரவியல், பொருளாதாரம், ஆங்கிலம்; 25ல், இயற்பியல், வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, அரசியல் அறிவியல் தேர்வு நடைபெறும்.வரும் 26ல், உயிரியல், விலங்கியல், வணிகக்கணிதம் மற்றும் புள்ளியியல், வரலாறு, டெக்டைல்ஸ் டெக்னாலஜி மற்றும் தமிழ்; 27ல், வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகள் நடத்தப்படும்.
இத்தேர்வு, காலை, 11:15 முதல், 12:45 மணி வரையும், மதியம், 3:00 முதல், 4:30 மணி வரை நடக்கிறது. குறைக்கப்பட்ட பாடப்பகுதியில் முதல் பாதியில் இருந்து வினாக்கள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment