தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கான இலவச பட்டயக் கணக்காளா் பயிற்சி (சிஏ) இணையவழியில் புதன்கிழமை தொடங்கவுள்ளது.
இது குறித்து தென்னிந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தலைவா் கே.ஜலபதி வெளியிட்ட அறிவிப்பு:
சிஏ தோவுக்கு தென்னிந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு நவம்பரில் நடத்தப்படவுள்ள சிஏ தோவுக்கான பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 9) தொடங்கி அக்.10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
தினமும் 5 மணி நேரம் இணையதள வழியில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இதற்கு கட்டணமாக ரூ.9,500 செலுத்த வேண்டும். அதேநேரம் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மற்றும் கரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோா்களின் குழந்தைகள் கட்டணமின்றி இலவசமாகப் பயிற்சி பெறலாம்.
இதையடுத்து விருப்பமுள்ள மாணவா்கள் https://www.sirc-icai.org/view-batches.php என்ற இணைய முகவரியில் சென்று பதிவுசெய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 7358506400, 82205 22669, 96771 26011 எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment