Search This Blog

Sunday, October 31, 2021

டிகிரி முடித்திருந்தால் போதும் வங்கிகளில் வேலை

0 comments
பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

பணி: புரொபேஷனரி ஆபிசர் (பி.ஓ.)

காலியிடம்:

இந்திய அளவில் பாங்க் ஆப் இந்தியா 588, மகாராஷ்டிரா வங்கி 400, கனரா வங்கி 650, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 620, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 98, பஞ்சாப் சிந்த் வங்கி 427, யு.சி.ஓ.


வங்கி 440, யூனியன் பாங்க் ஆப் இந்தியா 912 என, மொத்தம் 4135 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 20-30 வயதுக்குள்.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு.

பிரிலிமினரி தேர்வு தேதி: 4.12.2021 , 11.12. 2021.

தேர்வு மையம்: சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலுார், விருதுநகர்.

மெயின் தேர்வு: 2022 ஜனவரி.

தேர்வு மையம்: சென்னை, மதுரை, திருநெல்வேலி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.800. எஸ்.சி, - எஸ்.டி( ரூ.275)

கடைசி நாள்: 10.11.2021.

மேலும் விபரங்களுக்குன் www.ibps.in/wp-content/uploads/PO_XI_DA.pdf

No comments:

Post a Comment