ஜனவரி -20 வரை கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் சூழலில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.

அதன்படி, நாளை முதல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு வருகிற ஜனவரி 20ம் தேதி வரை (Study holiday) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையானது கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாணவர்களின் நலன் கருதியும், செமஸ்டர் தேர்வுகள் வர உள்ளதால் மாணவர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories