Search This Blog

Monday, August 15, 2022

அரசு மருத்துவமனையில் காலியிடங்கள் அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0 comments
பராமரிப்பு பணியாளர், இடி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 17



கல்வித் தகுதி: Ed Secretary பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிஎஸ்சி நர்சிங்/மருத்துவ உதவியாளர் படித்திருக்க வேண்டும். இதர பணிகளுக்கு கணினி அறிவுடன் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்:

டேட்டா ஆப்பிரேட்டர் துறையில் உள்ள பராமரிப்பு பணியாளர் பதிவுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு 23 -25 க்கு இடையில் இருக்க வேண்டும்.

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப் படமாட்டாது.

பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை மாவட்ட வலைதள முகவரி www.Dharmapuri.nic.in யிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஒரு பதவிக்கு ஒரு நபரிடமிருந்து ஒரு விண்ணப்பம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - முதல்வர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று, சாதிச் சான்று உட்பட விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்விச் சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம் (Self Attested) இடப்பட்டு இணைத்து அனுப்ப வேண்டும்.


விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஓட்டப்பட வேண்டும்;

விண்ணப்பத்தினை நேரில் மட்டுமே வழங்கப்பட வேண்டும்;

விண்ணப்பங்கள் 31.08.2022 நேரம் மாலை 5.45 மணிக்குள் வந்து சேரவேண்டும்.

No comments:

Post a Comment