8% வட்டி.. பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு.. 'செல்வ மகள் திட்டம்' குறித்து முழு விவரம் இதோ..

பெண் குழந்தைகள் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

அதில் முதன்மையான ஒன்று சுகன்யா சம்ரிதி யோஜனா என்கின்ற செல்வ மகள் சேமிப்பு திட்டம். அஞ்சல் நிலையங்கள் அல்லது வங்கிகளிலும் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்குக் கணக்கு தொடங்க முடியும்.

பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் யாராக இருந்தாலும் தபால் நிலையங்களில் கணக்கு துவங்கலாம். செலுத்தும் தொகைக்குப் பிரிவு 80 சி யின் படி வரி விலக்கு அளிக்கப்படுவதால் அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஏதுவான திட்டமாக உள்ளது.
பெற்றோர்கள் தங்களது இரண்டு குழந்தைகளுக்கு இரண்டு கணக்குகளைத் தொடங்கலாம். ஒருவேளை இரட்டைக்குழந்தைகள் பிறந்த பின்னதாக, 3 வது குழந்தைகள் பிறக்கும் பட்சத்தில் அவர்களுக்குக் கணக்குகளைத் தொடங்கலாம்.

ரூபாய் 250 செலுத்திச் சேமிப்புக் கணக்கை நீங்கள் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச வைப்புத்தொகையானது ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக ரூபாய் 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.

இவ்வாறு நீங்கள் சேமிக்கும் செலுத்தக்கூடிய சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளில் நிறைவு பெறும். ஆனால் நீங்கள் கணக்குத் தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் வரை மட்டும் தான் சேமிப்புத் தொகையைச் செலுத்த முடியும்.


நீங்கள் செலுத்தும் பணத்திற்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படும். 15 ஆண்டுகள் செலுத்திய பணத்திற்கு 8 சதவீதம் வட்டியுடன் 21 வருடங்கள் கழித்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பெண் குழந்தைக்கு 18 வருடங்கள் நிறைவு அடையும் பட்சத்தில் இடையில் தேவைக்காகவும் பணத்தை எடுக்க முடியும்.


உங்களால் நேரடியாகத் தபால் நிலையங்களுக்குச் செல்ல முடியவில்லை என்றால், ஆன்லைன் வாயிலாகவும் பரிவர்த்தனை செய்ய முடியும். தொடர்ந்து நீங்கள் மாதந்தோறும் பணத்தைச் செலுத்தி வரவும். ஒருவேளை பணத்தைச் சரியாகக் கட்டத் தவறும் பட்சத்தில் டெபாசிட்டுடன் ஆண்டுக்கு ரூபாய் 50 அபராதம் செலுத்தினால் தான் கணக்கைப் புதுப்பிக்க முடியும்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel