நாளை மறுநாள் முதல்... பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பற்றிய கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 25ம் தேதி நடைபெறுகிறது.

மேலும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26-ஆம் தேதி நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்று, இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel