Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 31, 2023

ஒற்றை தலைவலிக்கு நிரந்தர தீர்வு!!

நம்மில் பலருக்கு தலைவலி என்பது தீராத ஒரு நோயாக உள்ளது.

இந்த தலைவலியை குணப்படுத்த நாம் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு இருப்போம் ஆனால் அது ஒரு நல்ல தீர்வை தந்திருக்காது.

பல விதமான தைலங்களை பயன்படுத்திருப்போம். ஆனால் எல்லாம் சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் மட்டும் பலன் தந்திருக்கும். தற்காலிகமாக பலன் தந்த எந்தவொரு வைத்திய முறையும் நிரந்தர தீர்வை தராது. இந்த பதிவில் தலைவலிக்கு நிரந்தர தீர்வை கொடுக்கும் வைத்திய முறையை பற்றி தெரிந்து கொள்வோம்.

தலைவலியை பூரணமாக குணமாக்க நாம் வீட்டில் இருக்கும் மூன்று பொருள்களை மட்டுமே வைத்து மருந்தை தயாரித்து தலைவலியை குணமாக்கலாம்.குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வரும் வலிகளில் மிகப் பொதுவானதாகிய தலைவலி, பலருக்கு அடிக்கடி வரக்கூடும். மிகப் பெரும்பாலான தலையிடிகள் தீங்கற்றவையும், தானாகவே குணமாகக் கூடியவையும் ஆகும். தலைவலியை, மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்று ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்தி காண முடியுமானால் அதனைத் தவிர்க்க முடியும்.

தேவையான பொருள்கள்.

கற்பூரவல்லி இலைச்சாறு

சர்க்கரை

நல்லெண்ணெய்

செய்முறை

முதலில் கற்பூரவல்லி இலைகளை எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர் இதை நன்கு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த கற்பூரவல்லி இலை சாற்றில் சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். தலைவலியை குணமாக்கும் மருந்து தயாராகி விட்டது.

இந்த மருந்தை எடுத்து நெற்றியில் பற்று போல போட்டு சிறிது நேரம் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தலைவலி குணமாகும்

No comments:

Post a Comment