Wednesday, November 29, 2023

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வை ஒத்திவைக்க கோரிக்கை!!!


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கல்வி ஆண்டின் இடையில் (20.12.23 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது) நடைபெறுவதை தவிர்த்து கோடை விடுமுறை காலத்தில்,கல்வி ஆண்டின் துவக்கத்தில் நடத்த வலியுறுத்தி மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை செயலாளர்,மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை இயக்குநர், மதிப்புமிகு இணை இயக்குநர் (இடைநிலை) ஆகியோருக்கும் கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNGTA)

No comments:

Post a Comment