+2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 35 பேர் 100% மதிப்பெண் எடுத்து அசத்தல்..!!!

தமிழகத்தில் தற்போது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் 397 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனைப் படுத்துள்ளது.

அதன் பிறகு வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இந்நிலையில் தமிழ் பாடத்தில் 35 பேர் 100% மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளனர்.

அதன் பிறகு ஆங்கில பாடத்தில் 7 பேரும், 

கணிதத்தில் 2587 பேரும், 

இயற்பியல் பாடத்தில் 633 பேரும், 

வேதியியல் பாடத்தில் 471 பேரும், 

உயிரியல் பாடத்தில் 652 பேரும், 

தாவரவியல் பாடத்தில் 90 பெரும் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

மேலும் விலங்கியல் பாடத்தில் 382 பேரும், 

வணிகவியல் பாடத்தில் 6142 பேரும், 

கணக்குப்பதிவியல் பாடத்தில் 1647 பேரும், 

பொருளியல் பாடத்தில் 3299 பேரும், 

கணினி பயன்பாடுகள் பாடத்தில் 2251 பேரும், 

வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 210 பேரும் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6996 பேர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel