முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 2-ல் தொடங்கி நவம்பர் 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனிடையே, பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் https://-pgscholarship.aicte-india.org/ என்ற வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https:// www.aicte-india.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel