Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 27, 2025

பள்ளி மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் எவ்வாறு அதை மீண்டும் பெறுவது

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
1. மதிப்பெண் பட்டியல் தொலைந்தால் யாரை அணுகுவது?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

2. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

2. எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. 
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2)பட்டியல் ரூ.505.

3. கால வரையறை எத்தனை நாட்கள்?

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.


4. நடைமுறை என்ன பற்றிய முழு விவரங்கள்:

காவல் துறையில் புகார் அளித்து ‘கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம்

வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்தவிண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்டகல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.

இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News