சம வேலைக்கு சம ஊதியம் கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் மீள் பணியில் சேர HM & BEO அனுமதிக்கக் கூடாது - பள்ளிக் கல்வித்துறை

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,

சம வேலைக்கு சம ஊதியம் கோரி SSTA வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு மீள வருகை தரும் போது மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர் அனுமதி பெற்ற பின்னரே பணியில் சேர வேண்டுமெனவும், தன்னிச்சையாக வட்டாரக் கல்வி அலுவலரோ, பள்ளித் தலைமை ஆசிரியரோ சார்ந்த ஆசிரியரை பணியில் சேர அனுமதிக்க கூடாது என திட்ட வட்டமாக தெரிவிக்கப்படுகிறது. தவறினால் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கண்டிப்பாக தெரிவிக்கப்படுகிறது. - தொடக்கக் கல்வி
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel