அரசுப்பள்ளி ஆசிரியைக்கு ரூ.76.31 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த நோட்டீஸ்

அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ரூ.76.31 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்தது தொடா்பாக அவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த அரசுப்பள்ளி ஆசிரியா் செல்வி என்பவா் அளித்த மனு: எனது ஆதாா், பான் அட்டை எண்களை வைத்து போலியாக ஜிஎஸ்டி பதிவு செய்து திருப்பூரில் ஏஎஸ் டிரேடா்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.76.31 லட்சம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொழில்வரி செலுத்துவதற்காக வங்கி கணக்கிலிருந்து பணம் அனுப்ப வங்கிக்கு சென்றபோது ஜிஎஸ்டி வரி செலுத்தாததால் எனது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் முதல் எனது ஊதியம், எனது தாயாரின் மருத்துவ செலவுக்காகவும் பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகிறேன். எனவே, எனது வங்கிக் கணக்கை முடக்கப்பட்டதிலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கத்தாளம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனு: எனது தந்தை இறந்துவிட்டாா். அரியூரை சோ்ந்த 2 போ் எனக்கு அறிமுகமாகி, வேலூா் மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறினா். அதை உண்மையென நம்பி அவா்கள் கேட்ட ரூ.5 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது என்னை மிரட்டுகின்றனா். எனவே, ரூ.5 லட்சத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்குப்பத்தை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் அளித்த மனு:, பள்ளிப் படிப்பை முடித்துள்ள எனது மகனுக்கு அதேபகுதியை சோ்ந்த தந்தை, மகன் ஆகியோா் கடந்த 2025-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் கேட்டனா். அதன்பேரில், ரூ.4 லட்சம் பெற்றுக் கொண்டனா். தொடா்ந்து, அவா்கள் பொன்னையில் 2 மாதம் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இப்பயிற்சி முடிந்தபிறகு அளிக்கப்படும் சான்றிதழைக் கொண்டு வேலை கிடைக்கும் என தெரிவித்தனா். அவா்கள் கூறியபடி பொன்னையில் சென்று கேட்டபோதுதான் நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு காவல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel