Search This Blog

Saturday, September 12, 2026

மாணவர் சமுதாயத்துக்கு சாலமன் பாப்பையா சொன்ன செய்தி என்ன?

0 comments

தன்​னுடைய வரு​வா​யில், குறிப்பிட்ட பகு​தியை ஏழை மாணவர்​கள் கல்விக்​கும், நலிவடைந்தோர் வாழ்​வுக்​கும் கொடுத்து உதவியுள்​ளார் சாலமன் பாப்​பையா.

சமீபத்​தில் தான் பயின்ற மதுரை மாநக​ராட்சி வெள்ளி வீதி​யார் மேல்​நிலைப் பள்​ளி​யின் புதிய வகுப்​பறை கட்​டு​மானப் பணிக்கு ரூ.20 லட்​சம் வழங்கி உருக்​க​மாகப் பேசி​னார்.

அப்​போது அவர் பேசுகை​யில், “நான் இந்த பள்​ளி​யில் கற்ற சிறு வயது நாட்​கள் மிகுந்த மகிழ்ச்​சியை அளித்தது. அந்த காலத்​தில் பள்ளி வளாகத்​தில் சேட்டை செய்​யும் மாணவர்​களை, நன்​றாக படிக்​கும் மாணவர்​கள் குறித்து வைத்து தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்​டும். அவர், பிரம்​பால் அடிப்பார். அந்த காலத்​தில் பிரம்பை வைத்து அடிக்க ஆசிரியர்கள் பயப்படமாட்​டார்​கள்.

பள்​ளி​களுக்கு வராத பிள்​ளை​களுக்கு காலில் சங்​கிலியை போட்டு பெற்​றோரே கட்டி வைத்து விடு​வர். நாங்கள் வீட்​டுக்​குச் சென்று அவர்​களைப் பள்​ளிக்கு அழைத்​து வர வேண்​டும். வரும் வழி​யில் எங்​களை அந்த மாணவர்​கள் சில நேரம் அடித்​து​விட்டு தப்பி விடுவர். இப்​படி அடி வாங்கி​னாலும் பரவா​யில்லை, பள்​ளிக்கு வராத மாணவர்​களைக் கூப்​பிட போனால் வகுப்பு இல்லை என்ற சந்​தோஷம் இருக்​கும்.

காலை​யில் கிடைக்​கிற கால் வயிற்று கஞ்சியை குடித்​து​விட்​டு பசி​யோடு பள்​ளிக்கு வந்து படித்​தேன். ஆசிரியர்களின் கனிவான கண்​டிப்​பால்​தான் இன்று நான் உரமாக நிற்கி றேன். இன்​றைய மாணவர்​கள் ஆசிரியர்​களை மதிப்ப​தில்லை. அவர்​களுக்கு பயப்​படு​வ​தில்​லை. நாங்​களெல்லாம் ஆசிரியர்​களுக்கு ரொம்​பவே பயந்​தோம். எங்​களு​டைய பயத்​தின் பலனை இப்​போது அனுபவிக்​கிறோம்” என்​றார்.

- பேராசிரியர் சாலமன் பாப்​பையா மறைவையொட்டிய பகிர்வு

No comments:

Post a Comment