Search This Blog

Thursday, August 13, 2020

சுதந்திர தினவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்க தடை!

0 comments

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க தடை விதித்துள்ளது.

மேலும், சுதந்திர தின நிகழ்ச்சிகளை காண மக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், டி.வி, வானொலியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment